Friday, December 28, 2007

நாங்களும் கடற்கரை போனோம் - பாகம் ஒன்று

நேற்று (27.12.2007) நாங்கள் கடற்கரையொன்றுக்குப் போனோம்.
மெல்பேணிலுள்ள மிகப்பிரபலமான st. Kilda Beach க்குத்தான் போனோம்.
எடுத்த படங்களெல்லாவற்றையும் வெளியிட முடியாததால் இரண்டொரு படங்களை மட்டும் வெளியிடுகிறோம்.

மக்களைக் கிட்டவாகக் காட்சிப்படுத்தியவற்றைத் தவிர்த்து, தூரத்தில், ஒருமுனையில் நிற்கும் சிலரைக் காட்சிப்படுத்திய படமிது.

கடற்குளித்துக் கரைதிரும்பும் ஒருவர்.

மனம் கேட்காமல் இன்னொரு படம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இவ்விடுகையில் இருக்கும் நீதிகள்:

நீதி ஒன்று: மெல்பேணிலும் அழகான கடற்கரைகளுள்ளன; ஏராளமான மக்கள் நாளாந்தம் வந்து போகிறார்கள்.

நீதி இரண்டு: 'கனியிருப்ப காய்கவர்ந்தது போல' கடற்கரை பார்க்க இஞ்சயிருந்து ஆயிரம் கிலோமீற்றர்கள் தாண்டிப்போய் கடற்கரையில படுத்துக்கிடந்து (கடலுக்க இறங்கி உடம்பை நனைச்சாலும் பரவாயில்லை; மணலில இருந்து விடுப்புப் பாக்க என்ன கோதாரிக்கு இவ்வளவு தூரம் போகோணுமெண்டது எனக்கின்னும் விளங்கேல) எழும்பிவாறதுக்கு உண்டான கொழுப்பு இந்த வெயிற்காலத்தோடயாவது கரையக்கடவது.

**** சிட்னிக் கடற்கரை மெல்பேணிலிருந்து கிட்டத்தட்ட ஆயிரம் கிலோமீற்றர்கள்.
**** விளங்கப் புத்தியுள்ளவன் விளங்கட்டும்.
**** தொடர்பற்ற ஆக்கள் குறுக்குச் சூடுகளுக்க ஆப்பிட வேண்டாம்.

Labels: , ,