இங்கே கடந்த ஞாயிறன்று super market க்குச் சென்றபோது ஓரிடத்தில் கூட்டம் நின்றது. உடன பூந்து பாத்தா 'நடு விறாந்தையில்' பட்டியொன்று அடைச்சு, அதுக்குள்ள ஆடுகள் கோழிகள், வாத்துக்கள் எண்டு கொஞ்சத்தை அடைச்சு வச்சிருக்கினம். அதுகள் மட்டுமில்ல கொஞ்ச குழந்தைப்பிள்ளையளும் அந்தப் பட்டிக்குள்ள நிக்குதுகள். பட்டிக்கு வெளியில தாய்தேப்பன் நிண்டு பாத்துக்கொண்டிருக்குதுகள். குழந்தைகள் பிராணிகளுக்குச் சாப்பாடு குடுக்கிறதும் அதுகளத் தடவிக்கொண்டிருக்கிறதுமாய் இருக்குதுகள்.
பட்டிக்கள்ள போக ரெண்டு டொலர், ஒரு சாப்பாட்டுப்பொட்டலம் (பிராணிகளுக்குத்தான்) அரை டொலர் எண்டு யாவாரம் நடக்குது. குழந்தைகள் சாப்பாட்ட வில்லண்டமாத் தீத்தினாலும் அதுகள் சாப்பிடுதுகளில்ல. எவ்வளவெண்டு தான் அதுகளும் சாப்பிடுறது?
அண்டைக்குக் குழந்தைப்பிள்ளையளுக்கு நல்ல பொழுதுபோக்கு. எங்கட ஊரிலயெண்டா காசு குடுக்காமலே அத்தனையும் கிடைக்கும். இஞ்ச காசு குடுத்து அனுபவிக்க வேண்டிக்கிடக்கு. அதுவும் குழந்தைகளுக்கு மட்டுந்தானாம். நானும் ரெண்ட டொலர் குடுத்து பட்டிக்குள்ள போய் விளையாடுவமெண்டா என்னோட வந்த ஆக்கள் விடேல. அது குழந்தைகளுக்குத்தானாம். அட காசு குடுத்தாலும் கிடைக்காத அனுபவங்கள் இதுகள்.
நான் படமெடுக்கேக்க ஒரு மாதிரிப் பாத்தாங்கள். அவசரத்தில படங்களொண்டும் ஒழங்கா வரேல. மின்கலமும் மட்டுமட்டாப்போச்சு. படத்துக்குக் குறைநினையாதையுங்கோ.
தமிழ்ப்பதிவுகள் |