Tuesday, April 24, 2007

பரீட்சார்த்த நேயர் விருப்பம்

'சிஞ்சா மனுசி' கலையகம் அவுஸ்திரேலியாவிலும் தனது கிளையொன்றைத் தொடக்க நினைக்கிறது. தற்காலிகக் கலையகம் அமைக்கப்பட்டு பரீட்சார்த்தமாக 'நேயர் விருப்பம்' நிகழ்வொன்று VOIP நுட்பம் மூலம் நடத்தப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
அப்பரீட்சார்த்த ஒலித் தொகுப்பை இங்கு வழங்குகிறேன்.

நேயருடனான கலந்துரையாடலும் பின்னர், நேயர் கேட்ட பாடலும் ஒலிபரப்பாகின்றன.
கலந்துரையாடியவர்கள்: அவுஸ்திரேலியாவிலிருந்து வசந்தன், கனடாவிலிருந்து சினேகிதி.
(கவனமாப் பாருங்கோ, ஆக்களைவிட நாடுகள்தான் முக்கியம்).


இது சோதனையென்பதால், ஒலிப்பதிவிலும் அறிவிப்பிலும் குறைகளுள்ளன. விரைவில் களையப்படும்.
இந்த வேலைக்கு எந்த உள்நோக்கமுமில்லை என்பதை அறியத்தருகிறோம்.

Labels: ,

Saturday, April 21, 2007

சயந்தன் வீட்டுப்பூனைக்கு நடந்தது என்ன?

சயந்தனின் கொடுமை தாங்காமல் அவரின் வீட்டிலிருந்து பூனையொன்று தப்பிச்சென்றது வலைப்பதிவு வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். 'பூனையின் வாக்குமூலம்' என்ற இடுகையில் பாதிக்கப்பட்ட பூனை தன் வாக்குமூலத்தைப் பதிந்திருந்தது.
அங்கிருந்து தப்பிய பூனைக்கு என்ன நடந்தது? அது என்ன செய்கிறது என்று அறிய பலர் ஆவலாயிருப்பீர்கள்.

எமது துப்பறியும் பிரிவு அப்பூனையைக் கண்டுபிடித்துவிட்டது.
அது இப்போது மிகமிக மகிழ்ச்சியாக ஆடிப்பாடி கொண்டாட்டமாக இருக்கிறது.
ஒரு கொடுமையாளனிடமிருந்து தப்பித்த மகிழ்ச்சியில் கொண்டாட்டமாக ஆடிப்பாடும் பூனையை மறைந்திருந்து படம்பிடித்தது எமது துப்பறியும்குழு.
அந்த காணொளிக் காட்சியை நீங்களும் கண்டுகளியுங்கள்.




அப்பூனையின் பாதுகாப்புக் காரணங்களுக்காக (வேறென்ன? தெரிந்தால் மீண்டும் அப்பூனை பழைய கொடுமைகளை அனுபவிக்க வேண்டிவருமென்பதுதான்) தற்போது அப்பூனை இருக்குமிடத்தைச் சொல்ல முடியாது.

Labels: